search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்பக புற்றுநோய்"

    • சமீபகாலமாக மார்பக புற்றுநோய்க்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
    • அலட்சியம் செய்தால் புற்றுநோயின் வீரியம் அதிகமாகி உயிரிழப்புக்கும் வழிவகுத்துவிடும்.

    பெண்கள்தான் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகுவார்கள் என்றில்லை. சமீபகாலமாக இந்தியாவில் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆண்கள் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் கட்டிகள் அல்லது வீக்கம் இருப்பதாக உணர்ந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அலட்சியம் செய்தால் புற்றுநோயின் வீரியம் அதிகமாகி உயிரிழப்புக்கும் வழிவகுத்துவிடும்.

    ஆண்களில் சுமார் 81 சதவீதம் பேருக்கு மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் பற்றியோ, அதனை கண்டறிவதற்கு மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் பற்றியோ தெரிந்திருக்கவில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் முறையாக சிகிச்சை அளித்து நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிட முடியும்.

    குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தாலோ, மரபணு ரீதியாகவோ, ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தாலோ எளிதில் மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக பரம்பரை ரீதியாக யாருக்கேனும் புற்றுநோய் இருந்து வந்தால் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்பது மருத்துவர்களின் கருத்தாகும்.

    அது நோய் உருவாகுவதற்கு முன்பே கண்டறிய உதவும். புற்றுநோயின் வீரியத்தை குறைக்கும். தகுந்த சிகிச்சை பெறுவதற்கும் உதவும் என்கிறார்கள்.

    • கோவை மெடிக்கல் சென்டர் டாக்டர் காவ்யா கலந்து கொண்டு மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்து விளக்கி பேசினார்.
    • பள்ளி முதல்வர் பிரியாராஜா உள்பட ஏராளமான பெண்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    திருப்பூர் :

    ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன், ஏ.வி.பி. பள்ளியின் இண்ட்ராக்ட் கிளப், கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை இணைந்து ஹீல் திட்டத்தின் கீழ் மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச பரிசோதனை முகாம் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன் தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார்.

    செயலாளர் சந்திரன், பொருளாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவரும், ரோட்டரி மாவட்ட பயிற்றுனருமான கார்த்திகேயன், மாவட்ட பொதுச் செயலாளர் வரதராஜ், உதவி ஆளுனர் மெல்வின் பாபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராம், ஹீல் திட்டத்தின் மண்டல செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

    இதில் எஸ்.டி. எக்ஸ்போர்ட்ஸ் பி.லிட் லீலாவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    முகாமில் கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை டாக்டர் காவ்யா கலந்து கொண்டு மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்து விளக்கி பேசினார். இதில் ஏ.வி.பி. அறக்கட்டளை பொருளாளர் லதா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் பிரியாராஜா உள்பட ஏராளமான பெண்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • முகாமை மருத்துவர் பிரேமலதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மார்பக பரிசோதனையின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் 'பிங்க் அக்டோபர் 2022' கொண்டாடப்பட்டது. இதையொட்டி மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாமை இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா குத்துவிளக் கேற்றி தொடங்கி வைத்தார்.

    மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் மார்பக பரிசோதனையின் அவசியத்தையும், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.

    முகாமில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சொர்ணலதா, விஜயகுமார், முத்துக்குமாரசாமி, கார்த்திக், ஜெரின், விக்னேஷ்,பொது மருத்துவர்கள் லதா,கீதா, மல்லிகா,ஸ்கேன் மருத்துவர் நாகஜோதி, காது மூக்கு தொண்டை நிபுணர் மணிமாலா, மகப்பேறு மருத்துவர்கள்,செவிலிய கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, திருப்பதி, பயிற்சி மருத்துவர்கள் மேக்லி, எஸ்தர்,மருத்துவமனை செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் என அனைவரும் முகாமில் கலந்து கொண்டனர்.

    இதில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகளான மார்பில் கட்டி, வலி, மார்பகக் காம்புகள் உள்போகுதல், மார்பகக் காம்புகளில் இருந்து திரவம் வருதல், மார்பக சருமம் சிவந்து போதல், குடும்பத்தில் யாருக்கேனும் மார்பக புற்றுநோய் இருத்தல் போன்ற ஏதேனும் தொந்தரவு இருப்பவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். தென்காசி மாவட்டத்தை சார்ந்த அரசு அறுவை சிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு நிபுணர்கள்,ஸ்கேன் மருத்து வர்கள்,பொது மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றனர்.

    முகாமில் சுமார் 92 பயனாளிகள் பயன் பெற்றனர்.அனைவருக்கும் மார்பக பரிசோதனை செய்து, ஸ்கேன் மற்றும் மாமோ கிராம் செய்து சிகிச்சை அளி க்கப் பட்டது. அனைத்து ஏற்பாடு களை யும் உறைவிட மருத்துவர் எஸ் எஸ் ராஜேஷ் ஏற்பாடு செய்திருந்தார். என்.ஹச்.எம் நோடல் ஆபீசர் மருத்துவர் கார்த்திக் அறிவுடை நம்பி நன்றி கூறினார்.

    • தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடைபெற உள்ளது.
    • மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்க உள்ளனர்.

    தென்காசி:

    பிங்க் அக்டோபர் 2022 கொண்டாடுவதையொட்டி தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

    முகாமை இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் முரளி சங்கர் தலைமையில் முகாம் நடைபெறுகிறது.

    இதில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பில் கட்டி, வலி, மார்பகக் காம்புகள் உள்போகுதல், மார்பகக் காம்புகளில் இருந்து திரவம் வருதல், மார்பக சருமம் சிவந்து போதல், குடும்பத்தில் யாருக்கேனும் மார்பக புற்றுநோய் இருத்தல், போன்ற ஏதேனும் தொந்தரவு இருப்பின் அவர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம். தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அரசு அறுவை சிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு நிபுணர்கள்,ஸ்கேன் மருத்துவர்கள்,பொது மருத்து வர்கள் என பலர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க உள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தென்காசி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப் பாளர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் முகாமில் மார்பக சுயபரிசோதனை முறைகள் விளக்கப்படுகின்றன. இம்முகாமில் தென்காசி மாவட்ட பெண்கள் கலந்துகொண்டு, மார்பக பிரச்சினைகள் இருப்பின் அவை ஆரம்ப நிலையிலேயே கண்ட றியப்பட்டு சரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் பயன்பெறலாம் என கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.

    • முகாமானது வருகிற 20-ந்தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடக்கிறது.
    • முகாமிற்கான ஏற்பாடு களை ஜெயசேகரன் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள் செய்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவ மனையில் மார்பக புற்று நோய்க்கான இலவச ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று தொடங்கியது. முகாமானது வருகிற 20-ந்தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடக்கிறது.

    முகாமில் மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய் விழிப்புணர்வு, அதனை எதிர்கொள்ளும் முறை, அறுவை சிகிச்சை பற்றி ஆலோசனைகள், மருந்து முறைகள், புற்றுநோய் வரும்முன் தடுப்பது குறித்த ஆலோசனைகள், ஏற்கனவே மார்பக புற்றுநோய் கண்டு அறுவை சிகிச்சை செய்தவர்கள் மேலும் பரவாமல் தடுப்பது குறித்து ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    மேலும் ரூ.500 சிறப்பு கட்டணத்தில் மேமோ கிராம் சிறப்பு சிகிச்சை செய்யப்படுகிறது. முகாமில் புற்றுநோய்க்கான சிறப்பு அறுவை சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை டாக்டர்கள் பாலா, நிதிலா, ஸ்காட், கண்மணி, பிரஜித், தேவநாயகம், டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் தேவபிரசாத் ஜெயசேகரன் ஆகியோர் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.

    முகாமிற்கான ஏற்பாடு களை ஜெயசேகரன் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள் செய்து வருகின்றனர்.

    • மார்பகங்கள் பெரியதாக இருந்தால் அது புற்றுநோய்க்கான அறிகுறியாக அமையலாம்.
    • மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் இறப்பு விகிதம் பெண்களை விட அதிகமாக உள்ளது.

    மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால் ஆண்களும் பாதிப்புக்கு ஆளாகலாம். சமீபத்தில் புதுடெல்லியை சேர்ந்த 70 வயது முதியவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் மார்பக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    அதில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆண்களில் ஒரு சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மும்பையை சேர்ந்த பிரபல மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அனில் ஹரூர் தெரிவித்துள்ளார். மார்பக புற்றுநோய் பாலினத்தை பொறுத்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

    ஆண், பெண் இரு பாலருமே சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனை, நோய் தடுப்பு சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம் என்றும் அவர் கூறுகிறார். ''மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் இறப்பு விகிதம் பெண்களை விட அதிகமாக உள்ளது. ஏனெனில் போதிய விழிப்புணர்வு இல்லாததால், புற்றுநோயை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது. சமீப காலமாக ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது'' என்றும் குறிப்பிடுகிறார்.

    45 வயதுடைய ஆண் ஒருவர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி அவதிப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்கிறார். ''அந்த நபருக்கு மார்பகம் பெரிதாகிக்கொண்டிருந்திருக்கிறது. ஆனால் வலி இல்லாமல் இருந்ததால் அதனை கவனத்தில் கொள்ளாமல் இருந்துவிட்டார். நாளடைவில் மார்பு பகுதியில் அசவுகரியத்தை உணர்ந்ததால் தாமதமாக மருத்துவ பரிசோதனைக்கு வந்தார். அவரது மார்பு பகுதியில் கட்டி இருப்பதை கண்டுபிடித்தோம். அது வெடிக்கும் தருவாயில் இருந்தது.

    உடனே கட்டியின் அளவைக் குறைக்க கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது மார்பக திசு மற்றும் பாதிக்கப்பட்ட தசை பகுதி அகற்றப்பட்டது. ஆண்களுக்கு, மேமோகிராபி சிகிச்சை மேற்கொள்வது சவாலானது. எனவே, சோனோகிராபி மற்றும் பயாப்ஸி முறையில் சிகிச்சை அளித்து புற்றுநோயை கண்டறிந்தோம். துரதிருஷ்டவசமாக தாமதமாக மருத்துவ சிகிச்சையை நாடியதால் புற்றுநோய் பரவ தொடங்கி இருந்தது.

    ஆண்களுக்கு மார்பக திசுக்கள் குறைவாக இருப்பது புற்றுநோய் விரைவாக பரவுவதற்கு காரணமாகிவிடுகிறது. எனினும் அவரது தசைகளை மட்டுமே பாதித்தது. கல்லீரல், நுரையீரல், மூளை போன்ற முக்கிய உறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் புற்றுநோயின் தீவிர நிலையில் இருந்து அவரை காப்பாற்றிவிட்டோம்.

    ஆண்கள் இந்த விஷயத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்கு வெட்கப்படவோ, தயங்கவோ கூடாது. குறிப்பாக மார்பகங்கள் பெரியதாக இருந்தால் அது புற்றுநோய்க்கான அறிகுறியாக அமையலாம். குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்திருந்தால் மற்றவர்கள் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடும். எனவே மார்பகத்தில் கட்டிகள், வீக்கம் போன்ற அறிகுறிகள் வெளிப்பட்டால் அசட்டையாக இருக்காமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார்.

    • தினசரி 25 பெண்களுக்கு மெமோகிராம் பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நேற்றைய தினம் வரை மூன்று நாட்களில் 78 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
    • முகாம் கடைசி நாளான இன்று மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    திருச்சி :

    திருச்சி மலைக்கோட்டை இன்னர் வீல் சங்கம் மற்றும் தென்னூர் இந்து மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் கண்டறியும் மெகா மெமோகிராம் பரிசோதனை முகாம் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் தினசரி 25 பெண்களுக்கு மெமோகிராம் பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நேற்றைய தினம் வரை மூன்று நாட்களில் 78 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. முகாம் கடைசி நாளான இன்று மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு இன்னர் வீல் சங்கங்களின் மாவட்ட தலைவர் சூரிய பிரபா ராஜசேகரன் தலைமை தாங்கினார். இதில் தங்கமயில் ஜூவல்லரியின் முதன்மை இயக்க அதிகாரி விஷ்வ நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து பேசினார். இந்து மிஷன் மருத்துவமனையின் நிர்வாகி சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சி மலைக்கோட்டை இன்னர் வீல் சங்கத்தின் தலைவி கவிதா நாகராஜன் பேரணி ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் அந்த சங்கத்தின் நிர்வாகிகள் மீனா சுரேஷ், ஆண்ரூஸ் சேகர், உமா சந்தோஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

    • திருச்சி இந்து மிஷன் மருத்துவமனையில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் மெகா மெமோகிராம் பரிசோதனை முகாம் நடைபெற்றது
    • தொடர்ச்சியாக 4 நாட்கள் 100 பேருக்கு பரிசோதனை செய்து அதனை ஜெட்லீ புக்ஸ் ஆப் ரெக்கார்ட்சில் பதிவு செய்ய இருக்கிறது

    திருச்சி:

    திருச்சி மலைக்கோட்டை இன்னர் வீல் கிளப், திருச்சி தென்னூர் இந்து மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் மார்பக புற்றுநோயை கண்டறியும் மெகா மெமோகிராம் பரிசோதனை முகாம் இந்து மிஷன் ஆஸ்பத்திரியில் இன்று காலை தொடங்கியது.

    தங்கமயில் ஜூவல்லரி முதன்மை இயக்க அதிகாரி ரோட்டேரியன் வி.விஷ்வா நாராயணன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது, வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் பெண்களின் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க மெமோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    ஒரு எந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 20 பேருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள முடியும். தொடர்ச்சியாக 4 நாட்கள் 100 பேருக்கு பரிசோதனை செய்து அதனை ஜெட்லீ புக்ஸ் ஆப் ரெக்கார்ட்சில் பதிவு செய்ய இருக்கிறோம்.

    4-வது நாள் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது என்றார்.

    இந்து மிஷன் ஆஸ்பத்திரி நிர்வாகி சுப்பிரமணியம், திருச்சி இன்னர் வீல் கிளப் முன்னாள் தலைவர் வள்ளியம்மை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைவர் கவிதா நாகராஜன், செயலாளர் மீனா சுரேஷ் , ரோட்டேரியன் நாகராஜன்,மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆண்ட்ரூஸ் சேகர், சி.ஜி.ஆர்.உமா சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மார்பக புற்றுநோய் பெண்களிடையே அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே.
    • பெண்கள் தங்கள் மார்பகங்களை மாதம் இருமுறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    பெண்கள் தங்கள் மார்பகங்களை மாதம் இருமுறை சுய பரிசோதனை செய்வதன் மூலம், ஏதேனும் மாறுதல்கள் அல்லது புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் எளிதில் கண்டறியலாம்.

    மார்பக புற்றுநோய் பெண்களிடையே அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். 80 சதவீத மார்பகக் கட்டிகள், புற்றுநோயாக இருப்பதில்லை என்பது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியதாகும். பெண்கள் தங்கள் மார்பகங்களை மாதம் இருமுறை சுய பரிசோதனை செய்வதன் மூலம், ஏதேனும் மாறுதல்கள் அல்லது புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் எளிதில் கண்டறியலாம். இது தொடர்பான மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் விரைவில் குணப்படுத்த முடியும் என்கிறார் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் தமிழ்செல்வி.

    சுய பரிசோதனை செய்யும் முறை:

    * கண்ணாடி முன் நின்று கொண்டு மார்பகங்களை கவனிக்கவும். கைகளைத் தலைக்கு மேல் தூக்கிய நிலையிலோ அல்லது இடுப்பின் பக்கவாட்டில் வைத்துக்கொண்டோ மார்பகங்களை சற்று முன்னிறுத்தி உற்று நோக்கவும். மார்பகங்களில் தடிப்பு, வீக்கம், மரு, நிற மாறுபாடு மற்றும் மார்பக காம்புகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும்.

    * கைவிரல்களைத் தட்டையாக வைத்துக் கொண்டு, நின்றபடியோ அல்லது உட்கார்ந்தபடியோ மார்பகத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மேலும் கீழுமாக அழுத்திப் பார்க்கவும். வட்டவடிவத்தில் மார்பகத்தை சுற்றியும், மார்பக காம்புகளையும், அக்குள் பகுதி தொடங்கி அழுத்தியும், தடவியும் பார்க்கவும். இதன் மூலம் கட்டிகள், வீக்கங்கள் மற்றும் மார்பகக் காம்பில் ஏதேனும் திரவம் ரத்தம் கலந்த நிலையில் வெளியேறுகிறதா எனவும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

    * நின்று கொண்டு செய்த அதே சுய பரிசோதனையை, கீழே நேராக நிமிர்ந்து படுத்தவாறும் செய்து பார்க்கவும். வலது தோளுக்கு கீழே தலையணை வைத்துக்கொண்டு, வலது கையை தலைக்கு கீழே வைத்தபடி, வலது மார்பகத்தை இடது கை கொண்டு பரிசோதிக்கவும். இவ்வாறு இடது மார்பகத்தையும் பரிசோதிக்கவும்.

    பரிந்துரைகள்:

    * மார்பக சுய பரிசோதனையை மாதவிடாய் காலத்தின் இறுதி நாட்களில் செய்வது சிறந்தது. பெண்கள் 20 வயது முதல் மார்பக சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    * இந்த சுய பரிசோதனையின் மூலம் மார்பகங்கள் உங்களுக்கு பரிச்சயமாகி விடுவதால், மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டால் எளிதில் தெரிந்துகொண்டு, மருத்துவரை அணுகி தீர்வு காண முடியும்.

    * 29 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    * 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வருடம் ஒருமுறை அல்லது 2 வருடங்களுக்கு ஒரு முறை 'மெமோகிராம் பரிசோதனை' செய்து கொள்வது நல்லது.

    * புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் 80 சதவீதம் குணப்படுத்த முடியும். சுய பரிசோதனை செய்வதன் மூலம் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்.

    ஒருவரது குடும்ப பரம்பரையில் யாரேனும் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் இருந்திருக்குமானால், அவருக்கும் மார்பக புற்றுநோய் உருவாவதற்குரிய வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    மார்பக புற்றுநோய் உடைய ஒரு குடும்ப வரலாறு இருக்கும் பெண்கள், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக இடர் வாய்ப்பு பிரிவில் இருக்கின்றனர் என்றாலும், மார்பக புற்றுநோய் உள்ள அநேக பெண்களுக்கு அவர்களது குடும்பத்தில் புற்றுநோய் இருந்த வரலாறு இல்லை.

    புள்ளிவிவர ரீதியாக மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நபர்களில் ஏறக்குறைய 5 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே குடும்பத்தில் புற்றுநோய் இருந்த வரலாறு உள்ளது. மார்பக புற்றுநோய் இருந்த ஒரு முதல் டிகிரி உறவினர், இரண்டாம் டிகிரி உறவினர் அல்லது குடும்பத்தின் ஒரே தரப்பில் பல தலைமுறைகள் உங்களுக்கு இருப்பார்களானால், உங்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான இடர்வாய்ப்பு அதிகமாக இருக்கக்கூடும்.



    * மார்பக புற்றுநோய் தொற்றக்கூடியது அல்ல.

    * மரபணு மாற்றம் BRCA1 அல்லது BRCA2 ஒருவரது DNAவில் கண்டறியப்படுமானால், அவருக்கு நிச்சயமாக மார்பக புற்றுநோய் உருவாகக்கூடும்.

    * BRCA1 அல்லது BRCA2-ஐ கொண்டிருப்பதாக அறியப்படும் குடும்பங்களைப் பொறுத்தவரை, அந்த குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் தீங்கு விளைவிக்கக்கூடிய BRCA 1 அல்லது BRCA 2 மரபணு பிறழ்வை தனது உடலில் கொண்டிருப்பதில்லை மற்றும் அந்த குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு புற்றுநோய் நேர்வும் இந்த மரபணுக்களில் ஒன்றில் உள்ள தீங்குவிளைவிக்கக்கூடிய மரபணு பிறழ்வுடன் தொடர்புடையதல்ல. மேலும், BRCA 1 அல்லது BRCA 2 மரபணு பிறழ்வுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மார்பக மற்றும்  கருப்பைப்புற்றுநோய் உருவாவதில்லை. ஆனால், BRCA 1 அல்லது BRCA 2-ல் மரபு வழியில் மரபணு பிறழ்வுள்ள ஒரு பெண்ணுக்கு, அதுபோன்ற மரபணு பிறழ்வில்லாத ஒரு பெண்ணைவிட மார்பக புற்றுநோய் உருவாவதற்கு ஏறக்குறைய ஐந்து மடங்கு அதிக வாய்ப்புள்ளது.

    * வியர்வை அடக்கிகள் (Antiperspirants) மற்றும் துர்நாற்றம் போக்கிகள் (Deodorants) மார்பக புற்றுநோயை விளைவிப்பதில்லை. 
    ×